விமலின் பிணை கோரிக்கை மனு – கருத்து தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல்

221 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை கோரிக்கை மனு தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமக்கு பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், நீதிபதி ஒருவர் விடுமுறையில் சென்றதன் காரணமாக குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பபட்டுள்ளது.

இதேவேளை, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.