ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்

234 0

எதிர்வரும் ஜூன் மாதத்தின் பின்னர் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 1972ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுவந்த லெமினேட் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக இந்த இலத்திரணியல் அடையாள அட்டை பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்தின் தேவைகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.