நல்லாட்சி அரசாங்கம் செல்லும் பாதை தவறானது – ஜே.வி.பி

432 0

anura-kumara1ஊழல், மோசடி மற்றும் வீண் விரயோகம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், ஆளும் அரசாங்கத்தின் மீதும் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்க காலத்தில் ஊழல்களில் ஈடுப்பட்டவர்களை தற்போதைய அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது.
இத்தகைய அரசாங்கம் ஒன்று நாட்டுக்கு பயன்தராது.
எனவே இந்த அரசாங்கத்ததை வீழ்த்துவதே சிறந்தது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.