போதை பொருள் தொடர்பில் தனியான புலனாய்வு பிரிவு – ஜனாதிபதி

425 0

60e7665555aed397f245d17f269425d3_Lசட்டவிரோத போதை பொருள் தொடர்பான தகவல்கனை பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, காவல்துறையினர் மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக முப்படையினரிடம் விசேட தகவல் சேவை மற்றும் புலனாய்வு பிரிவும் தனியாக நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், தாம் தேசிய பாதுகாப்பு சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.