தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாது –அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. சேனேவிரத்ன

265 0

தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் தொழிட்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. சேனேவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழிலாளர்கள் இறந்தால் அவர்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொகையை இரட்டிப்பதற்கும் தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.