அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீடிப்பு

475 0

அரிசி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இதற்கான கால நீடிப்பை வழங்கியுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு மாற்று வழியாக 250 மெட்ரித் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கான கால எல்லை நேற்றைய தினத்துடன் நிறைவடைந்தது.

இதற்கமைய மேலும் 200 மெட்ரித் தொன் அரிசி வரிச்சலுகையின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படவுள்ளமையினாலேயே, இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.