ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் கிளிநொச்சிக்கு விஜயம்

280 0

முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ராதாகிருஸ்ணன்,

கிளிநொச்சி மாவட்டம் கல்வி சார் வளங்களை பெற்றுக்கொள்ளதா நிலை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இப்பாடசாலை பல்வேறு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளதை காண முடிவதாகவும், தன்னால் முடிந்தவரை பாடசாலையின் வளங்களை நிறைவு செய்ய முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அங்கு கருதது தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கிளிநொச்சி மாவட்டம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் உள்ளது.

இங்கு உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பன்முகப்புடுத்தப்பட்ட நிதியை கேட்க வேண்டும் என தெரிவித்தார். கிளிநொச்சி பா உறுப்பினர் தமது தொகுதி உட்பட பல பகுதிகளிற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் இரு வேறு நிகழ்வுகளில் பங்கு கொண்டார்.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நண்பகல் 12 மணியளவில் ராதாகிருஸ்ணன் 3 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.