களுத்துறை சம்பவம்; சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில்

248 0

களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனை மறைத்து வைத்து உதவி வழங்கிய குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 07ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதவான் கபில துஷ்சந்த உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

பேலியகொட மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.