பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

253 0

மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

மேல்மாடித்தெருவில் கணவனும் மனைவியுமான வைத்தியர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு பிறந்த குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 27ஆம் திகதி பிறந்த குழந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குழந்தையின் தாய் தப்பியோடிள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குறித்த பணிப்பெண் துறைநீலாவனையைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஏற்கனவே திருமணமானவர்.

இப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டாரெனவும் இவர்களுக்குப் பிறந்த பெண்குழந்தையொன்று சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.