பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்தி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

211 0

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மருந்து விஷமானதால் தமது பிள்ளை இறந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருந்து வழங்கப்பட்ட அன்று வீட்டுக்கு வந்த குறித்த சிறுவன், பாடசாலையில் தனக்கு நடுக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் பெற்றோர், பிள்ளையை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அன்றைய தினம் அவரது நிலை கவலைக்கிடமானதால் கரபிட்டிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளார்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் மாத்தறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர் என தெரியவந்துள்ளது.

எனினும் அந்த பாடசாலை அதிபரிடம் எமது செய்தி பிரிவு இது தொடர்பில் வினவிய போது, உரிய மருத்துவர்களினால் வழங்கப்பட்ட மருந்தையே இவ்வாறு அந்த மாணவனுக்கும் வழங்கியதாக கூறியுள்ளார்.

குறித்த மருந்து 5 வருட காலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.