வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

216 0

வவுனியாவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது வயல் உரிமையாளர் மோட்டார் குண்டு ஒன்றினை தமது வயலில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மடுக்கந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதி பெற்று விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.