களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – மேலும் இரண்டு பேர் கைது

212 0

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தி ஒன்றை மறைத்து வைத்தமைக்காக அவர்கள் கைதாகினர்.

கைதானவர்கள் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஏற்கனவே 3 பேர் வரையில் கைதாகியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 2 காவற்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.