நீரேந்துப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்காமை காரணமாக நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்திவலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பொதுமக்கள மின்சக்தியை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இந்த கருத்தை வௌியிட்டார்.

