இலங்கையின் மூன்று முக்கிய துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியா பங்களிப்பு

313 0
இலங்கையில் மூன்று முக்கிய துறைமுகங்களின் ஊடாக இந்தியா அபிவிருத்தி பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகவிவகார அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹம்பாந்தொட்டை துறைமுக அபிவிருத்தி பணிகளில் சீனா பங்காளியாகிறது.
எனினும் கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளில் இந்தியா பங்கேற்க முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.