இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாந்தை (Patricia Scotland) சந்தித்துள்ளார்.
நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்த சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தனவும் உடன் இருந்துள்ளர்.
இதன்போது இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

