காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு – சுமந்திரன்

214 0

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே சர்வதேசத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனை முதன்மையாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 38வது நாளாக தொடர்கிறது.

இந்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்.ஏ சுமந்திரன் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடுமையான அழுத்தங்களை ஜெனீவாவரை பிரயோகிக்கத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் காணாமல் போனோர் செயலகம் தொடர்பான சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.