சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் சுகாதார சோதனை

294 0

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருடன், நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால், இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு – புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை களஞ்சியசாலைகள் சோனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தூர பிரதேசங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, வெசாக் மற்றும் பொஷன் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் உணவு பாதுகாப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.