யாழ் அச்சுவேலி முக்கொலை செய்தவனுக்கு மரணதண்டனை:நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!

262 0

முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , 2 இலட்சம் அபராதமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.

குறித்த தீர்ப்பில் மேலும் நீதிபதி தெரிவிக்கையில், குறித்த சம்பவம் ஆனது திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. மூண்டு கொலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. மற்றைய இருவரையும் கொலை செய்யும் நோக்குடனையே வெட்டி காயமேற்படுத்தப்பட்டு உள்ளது.