வெலேசுதாவின் நண்பர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை

236 0

ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதான போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனப்படும் வெலே சுதாவின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றம் ஒப்புவிக்கப்பட்டதால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேலதிக நீதிமன்றத்தின் நீதவான் மனிலால் வைத்தியதிலக உத்தரவிட்டுள்ளார்.

பத்மராசா சுபேந்திரன் மற்றும் திருமானந்தன் கௌதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து 01 கிலோவும் 97 கிராம் நிறையுடைய ஹெரோய்னுடன் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.