விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது

226 0

சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார்.

அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக அவர் அத தெரணவிடம் கூறினார்.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் சுகயீனம் அடைந்ததனால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.