250இலட்சத்தில் வலி வடக்கில் இரண்டு மாடி வீடு கட்டுகிறார் மாவை சேனாதிராஜா!

230 0

வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் அங்கு மக்கள் மீளக் குடியேறுவதில்லையெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும், அதனைப் பொய்யாக்கும் விதத்திலும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட 250 இலட்சம் பெறுமதியான வீடொன்றைக் கட்டி வருகின்றார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக மாவை சேனாதிராவின் குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வந்தனர். இந்தியாவில் அவர்கள் வசித்து வந்த வீடு வாடகை வீடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததும் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிவிட்டனர்.

குறித்த வீட்டின் பெறுமதி 250 இலட்சம் எனத் தெரிவிக்கப்பட்டாலும், 150 இலட்சங்களுக்குள் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வீட்டில் விரைவாக மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினர் குடியேறவுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்ததும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுமந்திரன், சரவணபவன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் புதிதாக வீடுகளை கொள்வனவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.