இங்கிலாந்தில் விபத்து – இலங்கை கர்ப்பிணிப் பெண் படுகாயம்

228 0

இங்கிலாந்து – எசெக்ஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் கொள்ளையிட வந்தவர்களை அவர் தடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது மகிழுந்து ஒன்று அவரை மோதிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 25 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இலங்கைப் பெண்ணின் கருவில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று எசெக்ஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.