ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவு

305 0

ஐந்து முறை க்ராண்ட்ஸ்லேம் பட்டம் வென்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவடைந்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்தமைக்காக அவருக்கு 2 வருடகால தடை விதிக்கப்பட்டது.

எனினும் தாம் பாவித்த ஊக்கமருந்துகள் குறித்து சரியான அறிவுறை வழங்கப்படவில்லை என்று வாதாடி வந்ததன் பலனாக அவருக்கான தண்டனை காலம் 15 மாதங்களாக குறைக்கப்பட்டது.

இதன்படி தற்போது அவரது தடைக்காலம் நிறைவடைந்துள்ளது.

இதனை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ள போர்ஷே க்ராண்ட் ப்ரிக்ஸ் தொடரில் அவர் விளையாடவுள்ளார்.

தாம் மீள் திரும்பியது குறித்து பெரும் உட்சாகத்துடன் இருப்பதாக ஷரபோவா தெரிவித்துள்ளார்.