குரங்கு போனை திருடியதாக காவல்நிலையத்தில் முறைபாடு

248 0

பிரித்தானியப் பெண் ஒருவரின் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்றினை குரங்கு ஒன்று திருடிவிட்டதாக அநுராதபுர சுற்றுலா காவல்நிலையத்தில்; முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி 300 இஸ்ரேலிங் பவுன் பெறுமதியானது என்றும், இலங்கை ரூபாயில் 56,000 பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த கைத்தொலைபேசி தனக்கு மிகவும் பெறுமதி வாய்ந்தது எனத் தெரிவித்து இதனைத் தேடித் தருமாறு கோரியே குறித்த பெண் காவல் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண் பாடநெறி ஒன்றைத் தொடர்வதன் நிமித்தம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.