சிறையில் கலவரம் – இருவர் பலி

260 0

மெக்சிக்கோவின் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை முற்றுகையிட்ட சுமார் 50 கைதிகள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

அவர்களை கட்டுப்படுத்த சிறை காவலர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
அத்துடன் 13 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் மெக்சிகோ தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடந்தவருடம் மெக்சிகோ சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தினால் 49 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.