நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

242 0

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில் நில மீட்பு போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இந்த விடயம் குறித்து தாம் நேற்று பாதுகாப்பு செயலாளருடனும் கலந்துரையாடியதாகவும், இன்னும் சில கலந்துரையாடல்களின் பின்னர் இது குறித்த முடிவை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.