மோடியின் இலங்கை விஜயம் – மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

250 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கண்டியிலுள்ள மாநாயக்க தேரர்களுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து விளக்கமளித்துள்ளார்.

நேற்று கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்;ளார்

இந்த நிலையில், மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்,

பௌத்த மதத்தின் மீது இந்திய பிரதமர் பெரும் மதிப்பை வைத்திருப்பதாகவும், அவர் இலங்கை வரும் போது கண்டிக்குப் விஜயம் மேற்கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.