போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள மிதவாதிகள் சர்வதேச விசாரணை தேவை என்று கேட்கவில்லை.
இந்த நிலையில், இலங்கையின் நீதி விசாரணை பொறிமுறையில் வடக்கு மக்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த மக்களை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்ய முடியும்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.