பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் – மஹிந்த தேசப்பிரிய

218 0
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டங்களுக்கான ஆசன பகிர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதால், இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை நடத்துவது, உள்ளுராட்சிமன்ற அமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்திடமே உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது மற்றும் தேர்தல் சட்டதிட்டங்களில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.