தாம் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு ஏதேனும் செய்ய முடியுமாக இருந்தால் அதனை செய்ய உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தாம் யுத்த வெற்றியின் ஊடாகவும், நகர அபிவிருத்தியின் ஊடாகவும் இதனை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசியலில் ஈடுபடுவதற்கான இயலுமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தமது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவர் ஒருவருடன் இணைந்தே செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.