முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை – விக்னேஸ்வரன்

235 0

இலங்கையின் முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலத்தில் வைத்து சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவரை சந்தித்ததன் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தக்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு மாத்திரமே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றே தாம் அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளின் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு யாராகினும் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.

அதற்காக முழு இராணுவமும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தாம் கோரவில்லை.

சர்வதேசமும் அவ்வாறு கோரவில்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.