நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும்- நவீன் திசாநாயக்க(காணொளி)

281 0

நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என, அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றுவதற்கு, நுவரெலியா மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க,

–நுவரெலியா நகரத்தை பொறுத்த அளவில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.

எனவே இங்கிருக்கின்ற ஆலயத்தை அகற்றுவது தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆலயத்தை மட்டுமல்ல விகாரைகளையோ அல்லது வேறு எந்த ஒரு விதமான வணக்கஸ்தலங்களையோ அகற்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்.– எனவும் தெரிவித்தார்.

இதனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக் கொண்டதுடன் இனிமேல் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற கூடாது எனவும் குறிப்பிட்டனர்.