இந்த வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் – ஜனாதிபதி

266 0

மூன்று மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கு தயாராக இருக்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளை விடுத்து ஏனைய 7 மாகாண முதலமைச்சர்களையும் நேற்று ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

இதன்போது இந்த அறிவுறுத்;தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2012ஆம் ஆண்டு தேர்தல் இடம்பெற்ற கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான ஆட்சி காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அவற்றுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் இந்த தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திர கட்சி பலத்துடன் போட்டியிட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.