வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர்

215 0

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீண்டகாலமாக இந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்தவர் என்று தெரியவந்துள்ளது.

மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடற்படையினரும், மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்ட சோதனையின் போது 2 கிலோ ப்ரவுன் சுகருடன் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் இந்தியாவில் இருந்து படகு மூலம் போதைப் பொருளை கடத்தி, கொழும்பில் விநியோகித்து வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு போதைப் பொருளை கடத்துவதற்காக, அதிசொகுசு பேருந்துகளை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.