போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.

235 0

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு மேற்கத்தேய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அனுசரணை வழங்குகின்றன.

இது இலங்கையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முக்கியமானது என்று கூறப்படுகிறது.

ஆனால் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான இனக்குழுக்களுக்கு இடையில் இந்த விடயம் மேலும் பிளவினை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் போன்ற விடயங்கள் குறித்த கருத்தாடல்களின் மத்தியில், இரண்டு இனக்குழுக்களை ஐக்கியப்படுத்துவது கேள்விக்குரிய விடயம் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.