2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை கொழும்பு – 5 விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி பெற்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை கொழும்பு – 10 ஆனந்த மகா வித்தியாலயத்தின் மாணவரும், மாத்தறை ராகுல வித்தியாலத்தின் மாணவரும் பெற்றுள்ளனர்.
அதேநேரம், அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாண இந்து கல்லூரியின் மாணவர் ஏ.அபிநந்தன், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை இந்த பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.