மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஆளுநர் கோரிக்கை

272 0

மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே இதனை தெரிவித்தார்.

குரல் ரெஜினோல்

அதேவேளை, நல்லிணக்க செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது, தம்மையோ அல்லது வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரையோ உள்வாங்க வேண்டும் என வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெல்லிப்பளையில் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்பாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் பங்குகொள்வது மிகவும் அவசியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.