மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

400 0

25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் தமிழாலய மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களுக்கு மலர் தூவியும் சுடர் ஏற்றியும் தங்கள் இதய வணக்கத்தைத் தெரிவித்தனர்.

பல நூற்றுக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டு கவி வணக்கம் இசைவணக்கம் மற்றும் நடனங்கள் நாடகம் என பல நிகழ்வுகள் அரங்கேறியதுடன். அவருடன் இணைந்து பணியாற்றிய பலர் நினைவுரைகளை வளங்கினர்.