நாளை மறுதினம் கொழும்பில் நீர் விநியோகம் தடை

229 0

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுதினம் காலை 9.00 மணிமுதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் பொரலஸ்கமுவ, கொலன்னாவ கொட்டிகாவத்தை, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.