சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் – உதய கம்மன்பில

724 0

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி அநுரசேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ள விதத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.