இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொரியர் வேனில் கடத்தப்பட்ட 16.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட கார் சாரதி சந்தோஷ் உட்பட இருவரை சுங்கத்துறை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் மதிப்பு சுமார் 5 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷ் என்ற நபரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் இலங்கை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கொரியர் வேனில் தங்கத்தை கொண்டு வந்த சந்தோஷ் சிக்கியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.