இலங்கை தொடர்பில் நைஜீரியாவுக்கு விளக்கம்

332 0

003.-Chief-of-Protocol-of-the-Nigerian-Foreign-Ministry-and-Administrative-Attache-of-the-Sri-Lanka-High-Commission-were-also-present-at-the-meeting-1200x800இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை உயர்ஸ்தானிகர் நைஜீரியாவுக்கு விளக்கமளித்துள்ளார்.
நைஜீரியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்ற தம்பிராஜ் ரவீந்திரன், நைஜீரியாவின் ஜனாதிபதி மஹ்ம்மது புஹாரியிடம் தமது நியமனக்கடிதத்தை கையளித்தார்.
இதன்போதே இலங்கையின் நல்லிணக்கம் குறித்து உயர்ஸ்தானிகர் தமது விளக்கங்களை நைஜீரிய ஜனாதிபதிக்கு வழங்கினார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளும் சமாதான முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தமது வாழ்த்துக்களை இலங்கையின் ஜனாதிபதிக்கு தெரிவிப்பதாக நைஜீரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.