இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

362 0

fisher11இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் கோரிக்கையை  அடுத்து, இவர்களை விடுதலை செய்வதற்கான உரிய பரிந்துரைகளை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் வெளியாகவில்லை.
இவர்கள் கடல் எல்லையை மீறனார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.