உலக வங்கியின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

394 0

1469212702d1உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி இந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஸிம்பாப்வேயை சேர்ந்த இடாஹ் ஸ்ரவாயி ரிட்டிஹொக் (Idah Pswarayi-Riddihough)  என்பவர் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் இந்த வாரத்தில் இலங்கை வந்து, அரசாங்க அதிகாரிகளையும் அபிவிருத்தி பங்காளிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது உலக வங்கியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அவர் ஆராயவுள்ளார்.
அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
1993ஆம்ஆண்டு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தமது கலாநிதிப்பட்டத்தை பெற்றுள்ள, புதிய பிரதிநிதி உலகின் பல இடங்களிலும் உலக வங்கியின் சார்பில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.