மைத்திரியின் புதல்வர் தஹாம்க்கு எதிராக சதித்திட்டம்

493 0

news_20-07-2016_50sog-300x158ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை விமல்  வீரவன்ஸ தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றதற்கு பலி தீர்க்கும் வகையிலேயே ,  இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அதற்காக புறக்கோட்டையிலுள்ள வீடொன்றில் தனக்கு நெருக்கமானவர்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ள வீரவன்ஸ, தஹாம் சிறிசேனவிற்கு எதிராக சேறுபூசும் சுவரொட்டி ஒன்றை ஒட்ட தீர்மானித்துள்ளார்.தஹாம் சிறிசேன, வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ள எனக் கூற எவ்விதமான சாட்சியமும் இல்லை என்பதால், பெண்களை சம்பந்தப்படுத்தி சேறுபூசுவது என இறுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தஹாம் சிறிசேனவுடன் ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி கதை ஒன்றை புனைந்து சேறுபூசும் சுவரொட்டி ஒன்றை தயார் செய்யும் பொறுப்பை விமல் வீரவன்ஸவே ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.