இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் உடன்படிக்கை

380 0

world_bank55 மில்லியன் டொலர்களுக்கான கடன் திட்டத்துக்கான உடன்படிக்கை ஒன்று இலங்கை அரசாங்கத்துக்கும் உலக வங்கிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக இந்த கடன் பெறப்படவுள்ளது.

நகராட்சி சேவை வழங்கல், கலாசார ஊக்குவிப்பு மற்றும் சுற்றாடல் ஒத்துழைப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்களுக்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கை திறைசேரியின் செயலாளரும், உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளரும் கைச்சாத்திட்டுள்ளனர்.