எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில்

244 0
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத்தெரிவிக்கின்றன.
எனினும் இதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா குறித்து ஏற்கனவே மூன்று தடவைகள் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியை ஒதுக்குமாறு இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ள போதும், இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.