ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட அரசாங்கம் முனைவதாக மகிந்த குற்றச்சாட்டு

225 0
அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுவதற்கான காரணம், மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் ஆறு உபக்குழுக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டமை, நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான அலுவலகங்களின் அறிக்கைகள் வெளியாக்கப்பட்டமை என்பன, ஜீ.எஸ். ப்ளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நிபந்தனைகளாகும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அமுலாக்கவுள்ள புதிய சட்டமும், அவ்வாறான நிபந்தனைகளில் ஒன்று.
இவ்வாறான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட முனைவதாக மகிந்த குற்றம் சுமத்தியுள்ளார்.