ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை

232 0
வவுனியா – ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த காணி பகுதி ஏற்கனவே கடந்த மாதம் 18ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.
15 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணிப் பரப்பை இன்று உரிமையாளர்கள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.