தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

246 0
கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தி, இதற்கு நியாயம் வேண்டி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இது தொடர்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீனவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த விடயத்தில் உடனடியாக தீர்வினைக் காண மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
இதனை அடுத்து இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டு, போராட்டத்தைக் கைவிட தீர்மானிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.